Latest stories

‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை- அழகுநீலா ஜெயராம்

ராம் தங்கத்தின் திருக்கார்த்தியல் தொகுதியின் பதினோரு கதைகளும் வேறுபட்ட பதினோரு தளங்கள். ஆனால் பெரும்பாலானவற்றின் கதை மாந்தர்கள் சிறுவர்களே. நம்முடன் அல்லது நம் அருகாமையில் வாழும் மனிதர்கள் பற்றிய கதைகள். எல்லாருமே குமரி மாவட்டத்து நிஜ மாந்தர்கள். வாழைக்கா அப்பம், அவியல், சாயா, மார்ஷல் நேசமணி,நாரோலு, சுசீந்திரம், கன்னியாகுமரி, வெள்ளமடம், அழகியபாண்டிபுரம் என நாஞ்சில் நாட்டின் மணம் வீசும் கதைகள்...

‘புலிக்குத்தி’ விமர்சனம்- யுவராஜ் மாரிமுத்து

புலிக்குத்தி! – புன்னகையை தொலைக்க செய்த அதிகாரம்! “திருக்கார்த்தியல்” சிறுகதை தொகுப்பை தொடர்ந்து எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய “புலிக்குத்தி” சிறுகதை தொகுப்பு மொத்தம் ஒன்பது சிறுகதைகளை கொண்டுள்ளன. ஒன்பது சிறுகதைகளுமே இச்சமூகத்தில் அதிகாரம் தவறாக கையாளப்படுவதால் புன்னகையை தொலைத்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை பேசுகிறது. அம்மாவோ அல்லது அப்பாவோ இல்லாத விளிம்புநிலை...

திருக்கார்த்தியல் – கடிதம்- இரா.மகேஷ்

வணக்கம் தோழர், ஒரு உச்சி பொழுதில் மனம் நிலையற்ற தன்மையில் அலைந்து கொண்டிருந்த தருணத்தில் வீட்டில் இருந்து கிளம்பி எங்கு செல்வது என தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தேன். சினிமாவிற்கு செல்லலாம் என்று யோசனை ஒருபுறம் இருந்தாலும் மதிய காட்சிக்கு நிறைய நேரம் இருந்தது மேலும் நிலைகொள்ளாமையை அதிகரித்தது. உள்ளம் எரிச்சல் அடைவதை ஒரு பக்கம் உணரவும் முடிந்தது. சரி சற்று நிதானிக்கலாம், மனத்தை முதலில்...

‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை – இர. மௌலிதரன்.

  ராம் தங்கம் அவர்களுக்கோ, இந்த சிறுகதை தொகுப்பிற்கோ எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை இன்றைய சூழ்நிலையில் தேவைப்படாது என்று தான் எண்ணுகிறேன். ஏனெனில், இந்த வருடம் பெரிதும் பேசப்பட்ட, வாசிக்கப் பட்ட ஒரு புத்தகம் இது. அந்த வகையில் எனக்கும் ராம் தங்கம்- இன் எழுத்து புதிதானது தான். எனக்குள் பல விதமான கலவையான எண்ண ஓட்டங்களை ஓட வைத்துள்ளார் அவர்.  ஒரு சிறுகதை தொகுப்பில் எத்தனை கதைகள் இருந்தாலும், அந்த...

திருக்கார்த்தியல் வாசிப்பனுபவம் – சிவமணி

நாரோயில் என்று நண்பர்கள் பேசும் போது சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். இது போன்று வட்டார வழக்குகளை தாங்கி வந்திருக்கும் ராம் தங்கத்தின் வைரம் தான் இந்த திருக்கார்த்தியல். பெரும்பாலான கதைகளில் அம்மா-மகன், தாத்தா-பேரன், பாட்டி-பேரன், அனாதை சிறுவன், மனநிலை பாதிக்கப்பட்டவர், பசி, ஏக்கம் என்று எல்லாக் கதைகளிலும் ஏதோ ஒரு உறவை இழந்த தவிப்பும், வெறுமையும், ஏக்கமும் என்று பல ஒற்றுமைகளை கொண்டுள்ளது. இதில்...

திருக்கார்த்தியல் வாசிப்பனுபவம்- அய்யனார்

அண்ணன் ராம் தங்கம் அவர்களுக்கு ‌எனது வாழ்த்துகள் தங்களின் திருக்கார்த்தியல் நூல் கடந்த வாரம் கிடைத்தது. நேரம் கிடைக்கும் போது ஒருவழியாக வாசித்து முடித்தேன். நாஞ்சில் நாட்டுக் கதைகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. திருக்கார்த்தியல் தொடங்கி கடந்து போகும் வரை பதினொரு கதைகளும் கண்களை கசிய வைத்தன. குருதியெழும்பி நரம்புகளை புடைக்க வைத்தன. நல்ல சிறுகதை நூலை வாசித்து முடித்த மனநிறைவைத் தந்தது. மீண்டும்...

திருக்கார்த்தியல்- கடிதம்- திவ்யா

அன்புள்ள ராம் தங்கம் அவர்களுக்கு, வாழ்த்துக்கள். திருகார்த்தியலை ஒரு வழியாக வாசித்து முடித்து விட்டேன். மேற்கொண்டு வாசிக்க முடியாமல் திணறிப் போன பல இடங்களும், மனிதர்களும் அதற்கு ஒரு காரணம். வாங்கி வந்த அன்றைக்கே கார்த்திக்கின் வாழ்க்கையைப் படித்ததாலோ என்னவோ மேற்கொண்டு நகரவே முடியவில்லை.ஒரு நாள் முழுதும் கார்த்திக் எங்கே போயிருப்பான், திரும்பி அவனைப் பார்ப்போமா, அடுத்த கதைகளில் வந்து விட மாட்டானா...

2023- சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது

மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி அமைப்பு ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக யுவ புரஸ்கார் விருதுகளை வழங்கி வருகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது வழங்கும் விழா 2024ஆம் ஆண்டு ஜனவரி 12-13ஆம் தேதிகளில் கல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம்...

‘The Arteria’ மலையாள இதழ் நேர்காணல்

மலையாள செய்தி இணையதளமான ஆத்மா ஆன்லைனின் the Arteria web weeklyல் வெளிவந்த நேர்காணல். 1.கேந்திர சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற உங்களின் திருக்கார்த்தியல் புத்தகத்தை ஏன் வாசிக்க வேண்டும்? எல்லாரிடமும் ஒரு கேள்வி இருக்கும் ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்? என்கிறதுதான். ஏன் புத்தகம் வாசிக்கிற நேரத்த வேற எதிலாவது செலவிடலாமே? என பலருக்கு தோன்றும். பலபேர் அது போலவும் தங்களுடைய நேரத்தை செலவு...

‘ராஜவனம்’ மதிப்புரை- விமலா தேவி

சமீபத்தில் யுவபுரஸ்கார் விருதை பெற்ற திருக்கார்த்தியியல் படைப்பின் ஆசிரியர் ராம் தங்கமே ராஜவனம் எனும் இப்புத்தகத்தின் ஆசிரியர். மிக நீண்ட நாட்களாக எனக்கு வனங்களுக்குள் ட்ரெக்கிங் செல்ல வேண்டும் என்ற ஆசை. அதனை இப்புத்தகம் வாசிப்பதன் மூலமாக ஆசிரியர் நிறைவு செய்து இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பாக குரங்கணி மலைகளுக்கு ட்ரெக்கிங் சென்ற சிலர் அங்கு ஏற்பட்ட காட்டு தீயில் கருகி பிணமானதை பத்திரிகை...