மனதின் ஆழ் உறக்கம் கலைக்கும் பயணம். நான் கடலோரவாசி. எனக்கு கடலும் கடலோரமுமே பிடித்தமான இயற்கைச் சூழல்கள். பயணங்களில் வனங்களைக் கடந்திருந்தாலும் நடை பயணமாய் வனத்தைக் கடக்கும் வாய்ப்பு இன்று வரை கிட்டவேயில்லை. அந்தக் குறையை எழுத்தாளர் ராம் தங்கத்தின் ‘ராஜவனம்’ என்ற இந்தப் பதிவு தீர்த்து வைத்திருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. வாழ்வின் சுவாஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும்...