Home

Latest stories

‘ராஜவனம்’ அணிந்துரை – ஜோ டி குருஸ்

மனதின் ஆழ் உறக்கம் கலைக்கும் பயணம். நான் கடலோரவாசி. எனக்கு கடலும் கடலோரமுமே பிடித்தமான இயற்கைச் சூழல்கள். பயணங்களில் வனங்களைக் கடந்திருந்தாலும் நடை பயணமாய் வனத்தைக் கடக்கும் வாய்ப்பு இன்று வரை கிட்டவேயில்லை. அந்தக் குறையை எழுத்தாளர் ராம் தங்கத்தின் ‘ராஜவனம்’ என்ற இந்தப் பதிவு தீர்த்து வைத்திருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. வாழ்வின் சுவாஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும்...

‘ராஜவனம்’ கடிதம் – நாஞ்சில்நாடன்

ராஜவனம் வாசித்தேன். தமிழுக்கு புது வகை நாவல். கதையின் முடிவு ரொம்ப நல்லா இருக்கு. அதிலும் அந்த கோபால் காணிக்காரர்களிடம் வந்து சேர்ந்த பிறகு கதை ரொம்ப வலுவா இருக்கு. காணிக்காரர்களின் சடங்குகள், தாவரங்கள், உணவுகள் பற்றி ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க. இதை இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதி இருக்கலாமோன்னு எனக்கு தோணுச்சு. வாசிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு, நிறைய தகவல்கள் இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு. ...

‘ராஜவனம்’ கடிதம்

ராம் தங்கம் அவர்களுக்கு
வணக்கம்
‘ராஜவனம்’ குறுநாவல் நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது.
சிறிய எல்லை பரப்புக்குள் எத்தனை சாத்தியங்களை நிகழ்த்த முடியுமோ, அதைக் கடத்த சாத்தியங்களை நிகழ்த்தியிருக்கிறீர்கள். நன்றி மறவாத புலிக்கு நிகராக ராஜசேகரை மறவாதவர்களாக வனமனிதர்களையும் காட்டி முடித்திருப்பது நல்லமனமாக இருந்தது. வாழ்த்துகள்.
நன்றி
த.அரவிந்தன்

‘ராஜவனம்’ மதிப்புரை – திவாகர். ஜெ

இயற்கை தன்னுள்ளே அளப்பரிய சித்திரங்களை சிப்பிக்குள் முத்தாய் மறைத்து வைத்துள்ளது. நாம் தான் கண்ணிருந்தும் குருடராய் அவற்றையெல்லாம் நின்று நிதானிக்கும் பொறுமையற்றவராய் கண்டும், காணாதது போல் கடந்து சென்று விடுகிறோம். ஆனால், தானுணர்ந்த, அணுவணுவாய் ரசித்த கானகத்தின் அழகியலை அலுப்பின்றி இந்நூலில் பருகத் தந்திருக்கிறார் ஆசிரியர் ராம் தங்கம் அவர்கள்.   நூலின் அட்டைப்படமொன்றே போதும் நம் சிந்தையைக் கவர...

‘திருக்கார்த்தியல்’ வாசிப்பனுபவம் – ஜானகி ராம்ராஜ்

திருக்கார்த்தியல் பதினோரு கதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. ‘அசோகமித்ரன் விருது, சுஜாதா விருது, மற்றும் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதுகளைப் பெற்றுள்ளது’. ஒவ்வொரு கதையும் ஒரு தனிச்சிறப்பு (unique). கன்னியாகுமரி மாவட்ட வட்டார மொழி வழக்கில் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க எந்தத் தடையுமில்லா எழுத்துநடை. ஒரு சில வார்த்தைகள் பரிட்சயமில்லாததாக இருந்தது. மற்றபடி கதைகளை வாசிக்க எந்தவித...

‘புலிக்குத்தி’ அணிந்துரை – உமா ஷக்தி

கண்ணீரும் புன்னகையும் ஒருசேர வாசிப்புக்கு உள்ளாக்கிய கதைகள் அடங்கிய தொகுப்பு ‘புலிக்குத்தி’. ராம் தங்கத்தின் முதல் தொகுப்பான திருக்கார்த்தியல் புதிய எழுத்தாளர் ஒருவரின் தேர்ந்த எழுத்து வன்மையை வாசகருக்கு அறிமுகப்படுத்தியது. நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளராக அவர் வாசகப் பரப்பிலும், எழுத்தாளர்களின் மத்தியிலும் அறியப்பட்டு அத்தொகுப்பிற்காகப் பல விருதுகளையும் வாங்கினார். அடுத்து வெளியான அவரது ராஜவனம்...

‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை- அழகுநீலா ஜெயராம்

ராம் தங்கத்தின் திருக்கார்த்தியல் தொகுதியின் பதினோரு கதைகளும் வேறுபட்ட பதினோரு தளங்கள். ஆனால் பெரும்பாலானவற்றின் கதை மாந்தர்கள் சிறுவர்களே. நம்முடன் அல்லது நம் அருகாமையில் வாழும் மனிதர்கள் பற்றிய கதைகள். எல்லாருமே குமரி மாவட்டத்து நிஜ மாந்தர்கள். வாழைக்கா அப்பம், அவியல், சாயா, மார்ஷல் நேசமணி,நாரோலு, சுசீந்திரம், கன்னியாகுமரி, வெள்ளமடம், அழகியபாண்டிபுரம் என நாஞ்சில் நாட்டின் மணம் வீசும் கதைகள்...

‘புலிக்குத்தி’ விமர்சனம்- யுவராஜ் மாரிமுத்து

புலிக்குத்தி! – புன்னகையை தொலைக்க செய்த அதிகாரம்! “திருக்கார்த்தியல்” சிறுகதை தொகுப்பை தொடர்ந்து எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய “புலிக்குத்தி” சிறுகதை தொகுப்பு மொத்தம் ஒன்பது சிறுகதைகளை கொண்டுள்ளன. ஒன்பது சிறுகதைகளுமே இச்சமூகத்தில் அதிகாரம் தவறாக கையாளப்படுவதால் புன்னகையை தொலைத்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை பேசுகிறது. அம்மாவோ அல்லது அப்பாவோ இல்லாத விளிம்புநிலை...

திருக்கார்த்தியல் – கடிதம்- இரா.மகேஷ்

வணக்கம் தோழர், ஒரு உச்சி பொழுதில் மனம் நிலையற்ற தன்மையில் அலைந்து கொண்டிருந்த தருணத்தில் வீட்டில் இருந்து கிளம்பி எங்கு செல்வது என தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தேன். சினிமாவிற்கு செல்லலாம் என்று யோசனை ஒருபுறம் இருந்தாலும் மதிய காட்சிக்கு நிறைய நேரம் இருந்தது மேலும் நிலைகொள்ளாமையை அதிகரித்தது. உள்ளம் எரிச்சல் அடைவதை ஒரு பக்கம் உணரவும் முடிந்தது. சரி சற்று நிதானிக்கலாம், மனத்தை முதலில்...

‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை – இர. மௌலிதரன்.

  ராம் தங்கம் அவர்களுக்கோ, இந்த சிறுகதை தொகுப்பிற்கோ எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை இன்றைய சூழ்நிலையில் தேவைப்படாது என்று தான் எண்ணுகிறேன். ஏனெனில், இந்த வருடம் பெரிதும் பேசப்பட்ட, வாசிக்கப் பட்ட ஒரு புத்தகம் இது. அந்த வகையில் எனக்கும் ராம் தங்கம்- இன் எழுத்து புதிதானது தான். எனக்குள் பல விதமான கலவையான எண்ண ஓட்டங்களை ஓட வைத்துள்ளார் அவர்.  ஒரு சிறுகதை தொகுப்பில் எத்தனை கதைகள் இருந்தாலும், அந்த...