பொன்னீலன் 80

Book Cover: பொன்னீலன் 80
அப்பா எப்போதும் சமூகத்தோடு வாழ்பவர். தன் இளமைக் காலத்தில் இருந்தே தன்னை பாதித்த விஷயங்களை உற்று கவனித்து எழுதும் பழக்கம் உடையவர். நாகலாபுரத்தில் கல்வி அதிகாரியாக மூன்று வருடங்கள் செயல்பட்ட போது எழுதப்பட்ட சம்பவங்களே கரிசல் நாவல். தமிழக அரசின் பரிசு பெற்ற நாவல். அதை தொடர்ந்து எழுதிய சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள் யாவும் அப்படியே.

இன்றும் சுறுசுறுப்பாக புதிய படைப்புகளை வெளியிட்டும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தும் இயங்கிக் கொண்டிருக்கிறார் அப்பா. சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன் முன்னெடுக்க, இளம் எழுத்தாளர் ராம் தங்கத்தின் மூன்று மாத உழைப்பில், நம் அனைவரின் மகிழ்வில் பொன்னீலன் 80 விழா இனிதே நடைபெறுகிறது. பொன்னீலன் 80 சிறப்பு வெளியீடும் வெளியிடப்படுகிறது. இந்நூலில் கோர்க்கப்பட்ட பல்வேறு தளங்களில் செயல்படும் எழுத்தாளுமைகளின் கட்டுரைகள் அப்பாவின் எழுத்துக்கு ஆபரணங்களாக அமையும் என்பது உறுதி.
மருத்துவர். அழகுநீலா ஜெயராம்

About the author

ramthangam

Add comment

By ramthangam